பசி மயக்கத்தில்
உலர்ந்த நாவில்
தேங்கி நிற்கும்
எப்போதோ
தின்று களித்த
சோறு கறியின்
சுவை தாண்டிச்
செவிகளில் ஒலிக்கும்
" ஏதாவது சாப்பிட்டியா? "
என்கிற -
அம்மாவின் குரலில்
மனசடைக்க -
வயிறு நிரம்புகிறது.
####
மாரடைக்க
மனசு நிரம்பியெழும்
என் குரலும்
அம்மாவுக்குக் கேட்கும்
" வேளாவேளைக்கு
மருந்து சாப்பிட்டியா?"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக