ஒரு திரைப்படத்துக்காக நான் இயற்றிய பாடல்...
என் விழி மூடுமோர் கணம் துயில் கொள்ள வாயேன்
என் விரல் தூரிகை தொட்டெடுக்கும் துளியாக வாயேன்
தனிச்சாமம் வியர்த்துருகும் உடலாக வாயேன்
தளர்ந்துருகும் தொண்டைக்கோர் புனலாக வாயேன்...
(என் விழி மூடுமோர்)
மண்ணாசை பொன்னாசை எனக்கேதுமில்லை
பெண்ணாசையென்றாலும் உன்னோட எல்லை
வாழ்வாசை என்றென்றும் சாகாத தொல்லை
தீயாசை தோற்காது எரிக்காமல் என்னை...
(என் விழி மூடுமோர்)
காற்றாக அலைகின்றேன் உன்னிதழ் வருடிவாழ
காட்டாறாகக் கொதிக்கின்றேன் நீயழுது மாள
கூவாத குயிலாகத் துடிக்கும் என் காதல்
தோகை விரிக்காத மயிலாகத்தான் நோகும்
தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக