சர்க்கரை
கரைந்தது...
இனி,
சுவைத்ததையே
சுவைக்க வேண்டியிருக்கும்...
காலத்திற்கும்
புதிதாக
ருசிக்கயியலாது
இனிப்பின்
சுவையூறிய
நா!
#ரிஸ்கிஷெரீப்
இனி,
சுவைத்ததையே
சுவைக்க வேண்டியிருக்கும்...
காலத்திற்கும்
புதிதாக
ருசிக்கயியலாது
இனிப்பின்
சுவையூறிய
நா!
#ரிஸ்கிஷெரீப்
மனப்பயம்
காலத்துக்கும்
கண்கள் மேய்ந்து
பழகிய பாதையிலும்
ஒளியறுந்தழும்
கறுத்த இரவுகளில்
ஒற்றையாகத்
தனித்தின்றிக்
கூட்டமாகத்தான்
அணிவகுத்தாலும்
வேகம் பிடித்தே
நடக்கச் சொல்கிறது
இருளப்பித்
துரத்தி வரும்
மனப்பயம்.
- ரிஸ்கி ஷெரீப்.(இலங்கை}
...............................................................
பாவக் கறைகள்
அம்மா தர மறுத்து -
அடம் பிடித்தாலும்
வலிந்து போய்
அவள் சேலை துவைத்துக்
கழுவிக்கொள்கிறேன்
என் பாவக் கறைகளை.
.- ரிஸ்கி ஷெரீப்.
அரசியல் வாக்குறுதிகளை
அநியாயத்துக்கும்
தன் வயிற்றில் கரைப்பதற்கு.
காலத்துக்குமான
அதன் மிகை கோபம்
ஒருநாள்
காடு கொள்ளாச்
சூறாவளியாகச்
சுழன்றுதான்
அடித்துச் சுருட்டியெடுத்துச்
செல்லக்கூடும்
அக்கிரமக்காரர்களின்
ஆட்சிக் கட்டில்களை.
#ரிஸ்கிஷெரீப்
மயிலிறகுகளால்
நான் எப்போதோ
எழுதிச் சொருகிய
கவிதைச் செடி.
இப்போதும்
அவ்வப்போது
யாரும் கவனிக்காத
தருணங்களில்...
பதற்றத்தின்
மிருதங்க ஓசையில்
தடுமாறிச் சுழன்றபடி
உன் விரல்கள்
அதனை வருடி
வாசிக்கும்போதெல்லாம்,
செக்கச் செவந்து ஜொலிக்கத்தான் செய்கிறது...
நாணத்தின்
நடுநெற்றிப் பொட்டு!
#ரிஸ்கிஷெரீப்
உனக்கு பரிசளிப்பதற்கும்
உன்னிடம் பரிமாறிக்கொள்வதற்கும்
என்னிடம் எதுவுமேயில்லை...
தேகத்தணலும்
ஒரு கவிதையும்
சிறு குடையும் தவிர!
#ரிஸ்கிஷெரீப்
அடித்துத் துவைத்து
கசக்கிப் பிழிந்து,
அம்மாவின்
'கை வலி'யும்
கண்ணீரும்!
#ரிஸ்கிஷெரீப்
உச்சஸ்தாயியில் கதறுகிறேன்...
ஆயினும்;
எனது எரிச்சல்மீது
ஒரு புன்முறுவலை உதிர்த்துத்தான்
அகன்று செல்கின்றன
உறவும் சுற்றும் சூழலும்.
இப்போதெல்லாம்....
'வலி' என்பது
வார்த்தைகளுக்குள் மட்டுமே வசப்பட்ட
வர்ணிக்க வலுவற்ற சொல்லாகத்தான்
இருந்துகொண்டிருக்கிறது.
அதன்
ஆழர்த்தம் புரிந்த
'அம்மா...
நீ இன்னும்
கொஞ்ச காலம்
இருந்திருக்கலாம்!'
#ரிஸ்கிஷெரீப்
வீதிகளில்
பேரம் பேசினாலும்
அவள்(கள்)
அவிழ்த்துவிடுவது
அறைகளுக்குள்தான்
வீதிகளில்
விசர்நாய்களையும்
ஆணிப்பைகளையும் அவிழ்த்துவிடும்....
'ஒருமாதிரி'யான
இவர்களை விடவும்
சிறந்தவள்(கள்)
'அந்தமாதிரி'யான
அவள்(கள்) .
#ரிஸ்கிஷெரீப்
இற்றைக்கு
மட்டுமாவது
ஆண்களையெங்காவது
ஒளிந்து கொள்ளச்
சொல்லுங்கள்...
சந்தோசமோ
சங்கடமோ...
நம்மட பெண்கள்
கொஞ்சம் தனித்துணரட்டும்...
தனித்துலாவி வரட்டும்!
நனைந்து
கதறக் கதற
என்
கவிதையைக்
கசக்கிக்
கழுவியழித்து,
அந்த நதி
அதன்பாட்டுக்கு
நகர்ந்து....
கொண்டுதானிருந்தது
நகராமல்...
ஈரப்பார்வையை
நீர்மீதும்
இயலாமையை
தரைமீதும்
கடுஞ்சினத்தை
காற்றின்மீதும் வைத்திருந்தேன்.
மீளவும்
ஒரு காகிதத்தையும்
ஒரு கவிதையையும்
நான் எங்கு தேடியலைவேன்?
இல்லை...
எனக்குள்
எங்கிருந்துதான்
ஊற்றிக்கொள்வேன்
இன்னுமோர் காதலை?
புழுதி பறக்கக் கிளம்பிவரும் காற்றிலோ
ஒரே திக்கில் நகரும் நதியிலோ
தெலைப்பதற்காகிலும்.
#ரிஸ்கிஷெரீப்
எம்பிக் குதித்து,
காலத்திற்கும்
கடந்தே செல்ல வேண்டியிருக்கிறது...
கால் மிதிப்பில் களங்கப்படுத்தப்பட்டிருக்கும்
" நல்வரவு"
என்கிற நறுமண வார்த்தைகளை!
இசையின்
இடுப்பு மடிப்பில்கூட
சொக்கித் தளர்ந்துறங்கிடாத இரவுகள்; அவை இனிப்பான கவிதைகள். அவற்றின் அழகு கறுப்பால் எழுதப்பட்டிருக்கிறது. இருட்டு ஒட்டடைக்கஞ்சித்தான் நம்மில் பலர் "இரவு"களை வாசிப்பதில்லை. "இரவு"களில் சுவாசிப்பதுமில்லை.அவர்கள்
இரவுகளை ஒளித்துவைத்தேபழக்கப்பட்டவர்கள்...
நட்சத்திர ஊர்வலங்களை தரிசிக்கவா போகிறார்கள்? #ரிஸ்கிஷெரீப்நெருப்புத் துண்டங்களாகத்தான் விழுங்க வேண்டியிருக்கிறது...
மரணச் செய்திகளையும். 'மஜ்மா' மணக்கிறது... இனம்புரியாத யார் எவரோ, தொடர்ந்தும் பழுக்கக் காய்ச்சிய இரும்பை முதுகு முள்ளந்தண்டில் சொருகி... தலைக்குள் சம்மட்டியால் அடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். புத்தி மழுங்கி பூச்சியத்தில் நிற்கிறது. தரை சுழன்று பாதம் நழுவுகிறது... விழிகளுக்குள் நட்சத்திரங்கள் பறக்கின்றன. நாசிக்குள் 'மஜ்மா' மணக்கிறது. #ரிஸ்கிஷெரீப் 23,09,2021 #majma #ottamaavadi #riskyshareef
எத்தனை காலம்தான்
உன் சேலைத்தலைப்பில் என் கவிதையை?
கொஞ்சம் அவிழ்த்துவிடேன்...
வெளியேறிக்கொள்கிறேன்.
ரிஸ்கிஷெரீப்