உயிர்போகும்
தாங்கயியலா வலி...
உச்சஸ்தாயியில் கதறுகிறேன்...
ஆயினும்;
எனது எரிச்சல்மீது
ஒரு புன்முறுவலை உதிர்த்துத்தான்
அகன்று செல்கின்றன
உறவும் சுற்றும் சூழலும்.
இப்போதெல்லாம்....
'வலி' என்பது
வார்த்தைகளுக்குள் மட்டுமே வசப்பட்ட
வர்ணிக்க வலுவற்ற சொல்லாகத்தான்
இருந்துகொண்டிருக்கிறது.
அதன்
ஆழர்த்தம் புரிந்த
'அம்மா...
நீ இன்னும்
கொஞ்ச காலம்
இருந்திருக்கலாம்!'
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக