மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

மேலாடை களையாத என் பேனா!

னிப் பருக்கள்
பூத்து...

இதழ்கள் வெடித்து,

பூப்பெய்தக் காத்திருக்கும்
ஓர் செம்மலர் மொட்டை

களித்து வரைந்து களைத்த அயர்ச்சியில்

தலைக்குக்கூடக் குளிக்காமல்
ஒருக்களித்துப் படுத்திருந்தது தூரிகை.

முட்களை வரைய
முடியாதென்று வேறு
முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது.

அதற்கான கவிதையை
எழுத வெட்கித்துத் தொய்ந்து...
உட்கார்ந்திருக்கிறது

இன்னும் மேலாடை களையாத என் பேனா!
#ரிஸ்கிஷெரீப்

 

கருத்துகள் இல்லை: