மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

இனிப்பான கவிதைகள்...


சையின்
இடுப்பு மடிப்பில்கூட
சொக்கித் தளர்ந்துறங்கிடாத
இரவுகள்;

அவை
இனிப்பான கவிதைகள்.

அவற்றின் அழகு
கறுப்பால் எழுதப்பட்டிருக்கிறது.

இருட்டு ஒட்டடைக்கஞ்சித்தான்
நம்மில் பலர்
"இரவு"களை வாசிப்பதில்லை.

"இரவு"களில் சுவாசிப்பதுமில்லை.

"சோம்பல்" போர்வைக்குள்
சிறையிருப்பவர்கள்,

அவர்கள்
இரவுகளை ஒளித்துவைத்தே
பழக்கப்பட்டவர்கள்...

நட்சத்திர ஊர்வலங்களை
தரிசிக்கவா போகிறார்கள்?
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை: