இசையின்
இடுப்பு மடிப்பில்கூட
சொக்கித் தளர்ந்துறங்கிடாத
இரவுகள்;
அவை
இனிப்பான கவிதைகள்.
அவற்றின் அழகு
கறுப்பால் எழுதப்பட்டிருக்கிறது.
இருட்டு ஒட்டடைக்கஞ்சித்தான்
நம்மில் பலர்
"இரவு"களை வாசிப்பதில்லை.
"இரவு"களில் சுவாசிப்பதுமில்லை.
"சோம்பல்" போர்வைக்குள்
சிறையிருப்பவர்கள்,
அவர்கள்
இரவுகளை ஒளித்துவைத்தே
பழக்கப்பட்டவர்கள்...
நட்சத்திர ஊர்வலங்களை
தரிசிக்கவா போகிறார்கள்?
#ரிஸ்கிஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக