உன் புத்தகத்தின்
நிலா முற்றத்தில்
தழைத்திருக்கிறது...
மயிலிறகுகளால்
நான் எப்போதோ
எழுதிச் சொருகிய
கவிதைச் செடி.
இப்போதும்
அவ்வப்போது
யாரும் கவனிக்காத
தருணங்களில்...
பதற்றத்தின்
மிருதங்க ஓசையில்
தடுமாறிச் சுழன்றபடி
உன் விரல்கள்
அதனை வருடி
வாசிக்கும்போதெல்லாம்,
செக்கச் செவந்து ஜொலிக்கத்தான் செய்கிறது...
நாணத்தின்
நடுநெற்றிப் பொட்டு!
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக