வேரறுந்து போய்விட்டிருக்கிறது.
இடுப்பு மடிப்பில்
குடங்கள் அமர்த்தி
இளமை கொப்பளிக்கும்
ஈர எழுமிச்சைகளாய்...
சளக் மொளக்கெனச்
சிந்தச் சிந்த
புனலேந்தி வந்த
புல்லாங்குழல்கள்,
தாமரைத் தூரிகைகளில்
விளைந்த நீரோவியங்கள்
கயல்விழிகளான
மலர்விழிகளான
கிராமத்துத் தேவதைகள்
அவர்கள்
கிணறுகள் தொலைந்ததில்
மனசொடிந்த
மரபுக் கவிதைகள்,
மாயமாகிப் போனதில்
இருந்து
வேரறுந்து
காணாமல் போனதுதான்
விழிகள் நீரருந்திய காலம்!
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக