திரை மூடித் திறந்தால்தான் தெரியும்
அழுகைக் கடல் மூழ்கிச்சோர்ந்துவிட்டேன்.
துயர் தணிக்கவும்
திராணியில்லை.
கைநழுவியறுந்த
ஒளிமின்னும் மணிமாலையின்
முத்துக்களாக...
ஒன்றன் பின் இன்னொன்றென
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
உயிர்கள்.
திரை மூடித் திறந்தால்தான்
தெரியும்
மரணம்
தன் மன்றுக்கிழுத்துவரும்
அடுத்தவர் யாரெவரென.
#ரிஸ்கிஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக