ஊஞ்சல் கட்டி
ஆட்டுவிப்பார்கள்.
உச்சி குளிரும்...
உள்ளமுருகிக் கரையும்...
மேனி சிலிர்த்துச் சிவக்கும்...
அவர்கள்,
உன்னை ஊக்கிவித்தும்
ஆட்டுவித்துக்கொண்டுமேயிருப்பார்கள்.
காற்றைக் கிழித்தெழும் பரவசத்தில்
காது மடல் கடித்துத் தணியும்
சிற்றின்ப இடைவெளியில்
சூதுக்களியின் காயுருட்டல்கள் நிகழும்.
அதனை அறியாமல் தந்திரர்களின்
மந்திரக் கீதத்தில் மெய்மறந்து...
நீயும்
அகலக் கால் விரித்தாடுவாய்.
ஆகாயப் பரப்பில் நீந்தி,
அரிதார சௌந்தர்ய வெளியில்
சூதுக்களியின் காயுருட்டல்கள் நிகழும்.
அதனை அறியாமல் தந்திரர்களின்
மந்திரக் கீதத்தில் மெய்மறந்து...
நீயும்
அகலக் கால் விரித்தாடுவாய்.
ஆகாயப் பரப்பில் நீந்தி,
அரிதார சௌந்தர்ய வெளியில்
உலாவரும் உன் இறக்கைகள்.
போதாக்குறைக்கு
ஒளிமின்னும்
ஊஞ்சல் சுகம்,
காலத்திற்குமான
இன்ப வளமெனக்
கனாக் காண்பாய்.
எல்லாம்
ஓரிரு பத்து நாட்கள்தான்...
உன் விரலேறிய விஷச்சாயம்
போதாக்குறைக்கு
ஒளிமின்னும்
ஊஞ்சல் சுகம்,
காலத்திற்குமான
இன்ப வளமெனக்
கனாக் காண்பாய்.
எல்லாம்
ஓரிரு பத்து நாட்கள்தான்...
உன் விரலேறிய விஷச்சாயம்
உலர்ந்துவிடத் துணிந்துன்னைக்
கவிழ்த்துவிட்டுக் காணாமல்
கவிழ்த்துவிட்டுக் காணாமல்
போய்விடுவார்கள்,
ஊஞ்சலில் உன்னைக்
கட்டிவைத்து' ஆட்டியவர்கள்.
அப்புறம்,
தாயத்தில் தொலையாத தரித்திரியம்,
உன்னைச் சாக மிதிக்க,
ஊஞ்சல் மட்டும்
ஆடிக்கொண்டேயிருக்கும்
ஒற்றைக் கயிறு அறுந்து.
#ரிஸ்கிஷெரீப்
ஊஞ்சலில் உன்னைக்
கட்டிவைத்து' ஆட்டியவர்கள்.
அப்புறம்,
தாயத்தில் தொலையாத தரித்திரியம்,
உன்னைச் சாக மிதிக்க,
ஊஞ்சல் மட்டும்
ஆடிக்கொண்டேயிருக்கும்
ஒற்றைக் கயிறு அறுந்து.
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக