அறைகளின்
அரையிருட்டிலும்
இருட்டிலும்தான்
அதிகம்
அவிழ்ந்துவிடுகின்றன
தனித்து விடப்படும்
மனைவி,
தன் சேலைத்தலைப்பில்
மதியம் முழுதும்
முடிந்துகொள்ளும்
துயர்கள்.
காலத்துக்கும் அவிழ்வதேயில்லை...
இல்லத்தாளின் படுக்கை விரிப்பில்
இராக்களில் இடப்படும் துயர் முடிச்சுக்கள்!
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக