தொலைதூரமொன்றில்
வெட்கித்துப் பதுங்கி....
நாணப் பொட்டகற்றி, நிர்வாணமணிந்து
தலைக்குக் குளித்துக் கொண்டிருக்கிறதா ஒளி?
இங்கே...
இறங்கத் தயங்கி
இருட்டின் கிளைகளை
இறுக்கியணைத்து
உட்கார்ந்திருக்கிறது
பயம்.
இரவு இப்போதைக்கு
முறிந்தபாடில்லை.
தூக்கம் என்னைக்
கடித்துக்குதறி
வெளியே துரத்திவிட்டிருக்கிறது;
ஒரு வெறிநாயின்
சீற்றத்தோடு.
#ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக