கரும்புள்ளிகள்
கசக்கும்
கள்ளிச்செடிகளாயின்
அகங்காரமணிந்து
கனிந்த கவிதைகளாக...
மனங்களித்து
மயக்கும்
முத்துக்களாக...
நிலவை ஸ்பரிசித்த களைப்பில்
நிர்வாணமாய் சரிந்துதிர்ந்த
ஒளித்துளிகளாக...
எப்படித்தான்
முளைத்திருக்கின்றன
மேலுதட்டு முற்றத்தில்
முறுவல்பூத்து நிற்கும்
'மச்சங்கள்' மட்டும்?
#ரிஸ்கிஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக