அந்த நதி
நகர்ந்துகொண்டிருந்தது...
நனைந்து
கதறக் கதற
என்
கவிதையைக்
கசக்கிக்
கழுவியழித்து,
அந்த நதி
அதன்பாட்டுக்கு
நகர்ந்து....
கொண்டுதானிருந்தது
நகராமல்...
ஈரப்பார்வையை
நீர்மீதும்
இயலாமையை
தரைமீதும்
கடுஞ்சினத்தை
காற்றின்மீதும் வைத்திருந்தேன்.
கசிந்துகொண்டிருந்தது
காதலின் கடைசிச் சொட்டு.
மீளவும்
ஒரு காகிதத்தையும்
ஒரு கவிதையையும்
நான் எங்கு தேடியலைவேன்?
இல்லை...
எனக்குள்
எங்கிருந்துதான்
ஊற்றிக்கொள்வேன்
இன்னுமோர் காதலை?
புழுதி பறக்கக் கிளம்பிவரும் காற்றிலோ
ஒரே திக்கில் நகரும் நதியிலோ
தெலைப்பதற்காகிலும்.
#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக