மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மழை பொழிந்தோய்ந்ததோர் பொழுதில்...

ழை பொழிந்தோய்ந்ததோர் பொழுதில்

மனசை நனைத்து
ஈரம்
சொட்டச் சொட்ட...

நீ எடுத்துச் செல்ல
மறந்த குடை,

மடிப்புக் கலைந்து
உலர்ந்து சுருங்கி
வாசல் கதவிடுக்கில்
அப்படியேதான் இருக்கிறது....

என் வீட்டுத் திண்ணை
கழுவிச் செல்ல
எத்தனையோ மழைகள்
வந்துபோன பிறகும்.

#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை: