களவையும்
கற்று மற
என்றார்கள்...
களவாகத்தான்
கற்றபோதும்,
காதலைத்
துளியேனும்
மறக்க முடிவதில்லை.
களவாடித்தான்
போவார்களென
விட்டுப் பார்த்தாலும்...
விலகி நின்றாலும்,
காயங்களைத்
தொட்டுவிடும்
தூரம் தாண்டித்தான்
விரல்களையே
வைத்திருக்கிறார்கள்.
கண்ணீர் உறைந்த
விழியிடுக்கிப்
பார்த்தாலும்....
இப்போதெல்லாம்...
தலை கீழாகத்தான்
- நிற்கிறது...
வானமும் பூமியும்
என் வாழ்வாசையும்.
_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக