இதழ்களில்
வழியாத -
நிறங்களில்
நிற்காத -
மலர்களின்
அழகை
வசியம் -
செய்திருக்கும்,
மவுனத்தின்
மொழியறியத்
துளியும்
தயாரில்லை...
தனித்து மிளிரத்
துடித்தும்,
தன்னை
அடயாளப்படுத்த
விழைந்தும்,
இரைந்ததிரக்
குரலுயர்த்திக்
கடுகு தாளிக்கும்,
அகங்காரமணிந்த
அழகுப் பெண்கள்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக