மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மழைக்கான மனிதர்கள்




இப்பரந்த பூமியில்
இற்றைக்கும்,

இடைக்கிடையோ
இடைவிடாதோ
பொழியும் மழை,

இவர்களுக்கானதே.

இந்த இரக்க ஜீவன்கள்
உயிரிறக்க இறைக்கும் மலம்
உங்கள் ஆரோக்கியம்
என்பதுறைக்காததவரை,

இறைவனை யாசிக்கும்
உங்கள் நெஞ்சுருகிய
இறைஞ்சல்களில்,

எப்போதுமே -
பொழியப் போவதில்ல
எல்லோருக்குமான மழை.

ஆளுக்கொரு வளவில்
இவர்களுக்குத் -
தனிச் சிலை வைத்தாலும்,

உங்கள் மன மலத்தைக்
கழுவ முடியாது தோற்கும்
விடாது பெய்யும் மழை.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: