
நாய் குரைக்காத,
பேய் மரமேறிக்
- குதிக்காத,
நரி ஊளையிட்டு
- அதிராத,
நடுநிசியிரவில்
மின்சாரம் அறுந்து
புழுங்கிக் கலைந்த
தூக்கத்தை,
தொடர்ந்தணைக்கத்
தடுத்ததோர்
பூனை அழுகை.
' பூனை -
கலங்கியழுமறிகுறி
மரணச் செய்தி'யெனச்
சின்ன வயதில்
அம்மா குத்திய
- பச்சை,
நினைவில்
அகலாமலிருந்ததில்
தனித்துச்
சுருண்டிருந்ததறிந்து
வந்து
தொற்றிக்கொண்ட
- அச்சம்,
விக்கல் இம்சையாய்
விலகாமலேயே
- இருந்தது.
பூனையும்
தொடர்ந்தழுது
கொண்டேயிருந்தது.
விடியச் சில
நொடிகள் முன்
அறியாமல்
தூங்கியெழுந்தபோது,
அடங்கியிருந்தது
பூனை அழுகை.
தலை கனக்கக்
கண் கசக்கி -
யன்னல் விரித்துப்
பார்க்கத் தெரிந்தது...
எச்சில் தடவிக்
குட்டிப் பூனை
இழுத்தயிழுலப்பறியாமல்,
வேலியோரம்-
அசையாமல்
செத்திருந்ததோர்
தாய்ப்பூனை.
செத்திருந்ததோர்
தாய்ப்பூனை.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக