ஐஸ்வர்யாராய்
அழகுராணிதான்....
ஆனாலும்,
இற்றைக்கும் சிலர்
தமக்குள் இருக்கை
- போட்டிருப்பது
சினேகாவுக்கும்
நதியாவக்கும்தான்....
அஞ்சலியையும்
அமலாபாலையும்
'லைக்'பண்ணும்
முகநூல்களில்கூட
ஐஸைக் காண்பதரிது....
அழகுராணிதான்
என்பதற்காக
அவர்தான்
அனைத்து
இதய சாம்ராஜ்யங்களின்
இளவரசியென்றும்
சொல்வதற்கில்லை...
அழகாயிருந்தாலும்
அவிழ்த்துப் போட்டாலும்...
வலிய வந்தாலும்
வற்புறுத்தினாலும்....
எதுவும்
ஒட்டிக்கொள்வதில்லை
- மனசுகளில்
அதனதன்
தாகமும் பசியும்
அது அதுவே
அறிகிறது.
_ ரிஸ்கி ஷெரீப்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக