இனவாதப் பாம்புகளின் முடிவு
முள்ளிவாய்க்காலில்
படமெடுத்தாடிய மமதையில்
மதங்களின் மாரில்
கொத்தித் திரியத் துணிந்திருக்கும்
இனவெறிப் பாம்புகளும்
எங்கேயோயிருந்து
காத்திருந்து பார்த்திருந்து
பறந்துவரும்
இராட்சதப் பருந்தொன்றின்
பாதங்களுக்குக் கீழ்
ஒருநாள்
தம் கழுத்தில் மிதிபட்டு
நசுங்கிச் சாகும்.
_ ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக