மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 21 ஆகஸ்ட், 2013

இனவாதப் பாம்புகளின் முடிவு



முள்ளிவாய்க்காலில்
படமெடுத்தாடிய மமதையில்

மதங்களின் மாரில்
கொத்தித் திரியத் துணிந்திருக்கும்

இனவெறிப் பாம்புகளும்

எங்கேயோயிருந்து

காத்திருந்து பார்த்திருந்து
பறந்துவரும்

இராட்சதப் பருந்தொன்றின்
பாதங்களுக்குக் கீழ் 

ஒருநாள்

தம் கழுத்தில் மிதிபட்டு
நசுங்கிச் சாகும்.

_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: