கவிதைகள்
அலைந்து
கொண்டிருக்கின்றன
காற்றில்
அறைபட்டுக் கசங்கி...
இரவுப் பனியில்
குளிர்ந்தொடுங்கி...
வெயிலில்
கறுத்துக் காய்ந்து...
மழையில் குடையின்றி
நனைந்து...
நிர்வாணமாக
அலைந்து
கொண்டிருக்கின்றன
கவிதைகள்
காட்டிலும்
மேட்டிலும்
பாலையிலும்
சோலையிலும்
கடலுக்கும்
வானுக்குமிடையிலான
ஆகாயவெளி
முழுக்கவும்
பசி பிடித்தும்
மதம் பிடித்தும்
வெறி பிடித்தும்
காதல் கசிந்து
தோள் சாய்ந்து
அழுது புலம்பவும்
கட்டியணைத்துக்
கடித்துக் குதறி
காமம் தணிக்கவும்
சமூகச்
சோகமுரைத்துக்
கடனும் பழியும்
தீர்க்கவும்...
அலைந்து
கொண்டிருக்கின்றன
இன்னும் எழுதப்படாத
அழகான கவிதைகள்
தம்மையலங்கரித்து
உடுத்திப் பார்க்கவும்
எடுத்தாளவும்
தெரிந்ததோர்
கவிதைக்காரனையோ
கவிதைக்காரியையோ தேடி.
- ரிஸ்கி ஷெரீப்.
தெரிந்ததோர்
கவிதைக்காரனையோ
கவிதைக்காரியையோ தேடி.
- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக