காதல்
அலைவரிசையில்...
மனசுகள் சினுங்கும்
- காலத்தில்
என் காதல் மட்டும்
பாலையில் பெய்த
மழையாகிப் போனதேன்?
......
தோழி,
நலமாயில்லை.
நலமாயிருக்கிறாயா?
நட்புக் காம்பெல்லாம்
அரித்துவிட்ட நிலையில்
தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது
மருண்டு மிரண்டு
கண்முன்னே
வாழ்க்கை திகைக்கிறது
......
நான் இப்போது
எனக்கே நானில்லையா?
என்ன ஆச்சு
எல்லாம்
போயே போச்சு
......
உயிர்ப்பின் பாக்கியமாய்
உன்மீதான காதலைச்
சொல்லலாம்...
எண்ணெய் வற்றவும்
- எரியும்
என் வேதனையைச்
சொல்ல முடியாதடி
......
புரண்டு படுத்தாலும்
இப்போதெல்லாம்
விழிகள் திறந்தே
கிடக்கின்றன
வெற்றுத் தரையிலும்
சுவரிலும்தான்
சாய்ந்து கொள்கிறது
ஆசை குடித்த விரக்தி
சாலையைக்
கடக்கும்போதும்
சவக்காட்டைக் கடக்கும்
பிரமை
அழுகத் தொடங்கிற்றோ
ஆளுமை? இல்லை
அழத்தொடங்கிற்று
பச்சை மண் மனசு
.......
உடைந்து உள்ளே
நான்
உயிர்த்திருக்கும்போதே
உயிரிழந்திருக்கும்
இந்தச் சோகம்
உன்னில் உணரப்பட
- வேண்டுமாயின்...
நீயொரு நிமிடம்
நானாக
வாழ்ந்து பார்க்க வேண்டும்
நீ விட்டுச் சென்றயிடத்தில்
உன் வாசம் பிடித்துக்
காத்திருக்கும்
என் தவிப்பையுணர...
குறைந்தபட்சம்
நீயொரு பூவாக
இருக்க வேண்டும்
......
நலமாயில்லை...
நலமாயிருக்கிறாயா?
......
என்னையே பதக்கமெனச்
சூடியிருந்த
என் தேவதையே...
மனிதர்களைத் தின்ற
வாழ்க்கையில்
என்னைத் தின்றது
உன் காதலடி...
தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது...
உனது நான்
உயிரில் இறக்கும்வரை
உன் நினவுகளின் வெள்ளம்
என்னை
விழுங்கிக்கொண்டுதானிருக்கும்.
- ரிஸ்கி ஷெரீப்.
காதல்
அலைவரிசையில்...
மனசுகள் சினுங்கும்
- காலத்தில்
என் காதல் மட்டும்
பாலையில் பெய்த
மழையாகிப் போனதேன்?
......
தோழி,
நலமாயில்லை.
நலமாயிருக்கிறாயா?
நட்புக் காம்பெல்லாம்
அரித்துவிட்ட நிலையில்
தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது
மருண்டு மிரண்டு
கண்முன்னே
வாழ்க்கை திகைக்கிறது
......
நான் இப்போது
எனக்கே நானில்லையா?
என்ன ஆச்சு
எல்லாம்
போயே போச்சு
......
உயிர்ப்பின் பாக்கியமாய்
உன்மீதான காதலைச்
சொல்லலாம்...
எண்ணெய் வற்றவும்
- எரியும்
என் வேதனையைச்
சொல்ல முடியாதடி
......
புரண்டு படுத்தாலும்
இப்போதெல்லாம்
விழிகள் திறந்தே
கிடக்கின்றன
வெற்றுத் தரையிலும்
சுவரிலும்தான்
சாய்ந்து கொள்கிறது
ஆசை குடித்த விரக்தி
சாலையைக்
கடக்கும்போதும்
சவக்காட்டைக் கடக்கும்
பிரமை
அழுகத் தொடங்கிற்றோ
ஆளுமை? இல்லை
அழத்தொடங்கிற்று
பச்சை மண் மனசு
.......
உடைந்து உள்ளே
நான்
உயிர்த்திருக்கும்போதே
உயிரிழந்திருக்கும்
இந்தச் சோகம்
உன்னில் உணரப்பட
- வேண்டுமாயின்...
நீயொரு நிமிடம்
நானாக
வாழ்ந்து பார்க்க வேண்டும்
நீ விட்டுச் சென்றயிடத்தில்
உன் வாசம் பிடித்துக்
காத்திருக்கும்
என் தவிப்பையுணர...
குறைந்தபட்சம்
நீயொரு பூவாக
இருக்க வேண்டும்
......
நலமாயில்லை...
நலமாயிருக்கிறாயா?
......
என்னையே பதக்கமெனச்
சூடியிருந்த
என் தேவதையே...
மனிதர்களைத் தின்ற
வாழ்க்கையில்
என்னைத் தின்றது
உன் காதலடி...
தனிமை தகிக்கிறது
உள்தாமரை அவிகிறது...
உனது நான்
உயிரில் இறக்கும்வரை
உன் நினவுகளின் வெள்ளம்
என்னை
விழுங்கிக்கொண்டுதானிருக்கும்.
- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக