மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 5 நவம்பர், 2009

மழைக் கிராமத்தின் கதை - 2

 [இரண்டாவது அங்ம்]


ஞ்சவர்ணம்...

பாரதிராஜா
கொத்திப்போகத் தவறிய
பாரிஜாதம்.

புறத்தோலுரிந்த
மரவள்ளி நிறத்தில்...

கொவ்வையிதழ் மேல்
நட்சத்திரமாய்
கருமச்சமும்...

காந்தமாய் ஈர்க்கும்
கருவண்டு விழிகளும்...

சிரிக்கையில்
தடுக்கி -
விழத்தோன்றும்
வலக்கன்னக் குழியும்...

பாம்பு -
நெளிந்ததாற்போன்ற
மடிப்புக் கலையாத
ஒடிந்துவிடும
இடையும்...

திமிறித்
திணறும்
மாரும்...

நெய்
குழைத்துச் செய்த
சிலையாய்...

அழகிய பிறப்பின்
அதிசயங்களில்
ஒன்றாய்...

இருபது வயதிலிருந்த
இந்த இனிப்பான
நிலவுக்கு
இன்னுமோர் பெயர்தான்
பஞ்சவர்ணம்.

மலைக்காடே
நுகர்ந்து பார்க்கத்
துடித்த -
கஞ்சாக்காடு.

கிராமத்து
அழகுராணிப்
- போட்டிகளின்
அனைத்துக்
கிரீடங்களையும்
தன் தலைமேல்
அமர்த்திக் கொண்ட
அற்புத அழகி.

அழகிய தீ
வடிவமைத்த
தென்றல்.

இந்தத் தென்றல்
தெருவிறங்கக்
காத்திருந்து -
முளைக்கும்
யன்னல் விழிகள்...

தம் மனசுக்குள்
அசிங்கம் செய்து
தடுமாறிய போதும்,

தடம் மாறாமல்
நிறம் மாறாமல்
இருந்த
வைர மூக்குத்திதான்
இந்தப்
பஞ்சவர்ணம்.

இருந்தபோதும்...

இந்த
வைர மூக்குத்தியை
தன் உயிரில்
உயில் எழுதிக்கொண்டது
ஒரு -
கறுப்புத் தங்கம்.

மலைக்காட்டில்
விளைந்த -
இருபத்தி நான்கு
வயதுச் சொக்கத்தங்கம்.

செங்கல் சூளைக்கு
மண் மிதிக்கச்
சென்றவளை மீறி
ஏறி மிதித்து
அமர்ந்து கொண்ட
- காதல்...

கடைசிவரைக்கும்
அவளைக்
குப்புறப்படுத்தியேதான்
க்ருக்கொண்டது.

[தொடரும்]

ரிஸ்கி ஷெரீப்
இலங்கை.
05.11.2009

கருத்துகள் இல்லை: