ஆடையன்னத்தோரத்துப் பூக்கள்
எக்கோடையிலும் உதிர்வதில்லை
வளைந்து நெளிந்து
ஒடுங்கி விரிந்தோடுவதுதான்
நதிகளுக்கு அழகு
ஆயினும்,
காதலினால் ஆசிர்வதிக்கப்பட்ட
இருக்கைகள்
எப்போதும் நிரம்பி வழிவதில்லை.
கனிந்த நெருப்பும்
தாழ்ந்துதான் தணிகிறது...
தேகம் தின்று வென்று
தொய்ந்த காமம்போல!
#ரிஸ்கிஷெரீப் 24,10,2021

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக